aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Tuesday 8 November 2011

September 19, 2011 Slideshow Slideshow

September 19, 2011 Slideshow Slideshow: TripAdvisor™ TripWow ★ September 19, 2011 Slideshow Slideshow ★ to Chennai (Madras). Stunning free travel slideshows on TripAdvisor

Tuesday 6 September 2011

aaa social entrepreneurship centers

aaa social entrepreneurship centers:

aaa social network businesses that trade for a social or environmental purpose. It provides central access to information, intelligence, resources, contacts and sources of support for anyone interested in developing or working with aaa centres in region. aaa centres considering how they could start a business to tackle a social or environmental need are being invited to take advantage of a new range of support aimed at helping them launch and prosper aaa social network. As each business progresses, further help will be available for the whole organisation and the management team to help develop the aaa social network.

aaa social entrepreneurship centers: Social Apps | Conduit

aaa social entrepreneurship centers: Social Apps | Conduit:

'via Blog this'

Social Apps | Conduit

Social Apps | Conduit:

'via Blog this'

Saturday 27 August 2011

26.. இயல்பு தியானம்


26.. இயல்பு தியானம்

                ``நம்முடைய தனித்தன்மையான இயல்புணர்வை அறிவதற்கான ஒரு தேடுதலைத் தொடர்ந்து நடத்தப்படும் செயல்முறை பயிற்சி தான் இயல்பு தியானம். இதனால் ஆழ்மன அனுபவம் ஏற்பட்டு நமது வாழ்க்கை முறை சம்பந்தப்பட்ட பல விஷயங்களை மாற்றி யமைத்து நமது இயல்பு நிலையை விரைந்து அறியச் செய்கிறது’’.


                இயல்பான ஏழாவது அறிவால் நமது உள்முக நம்பிக்கையை வளர்த்து இயல்புணர்வால் நம்மை நாமே அறியச் செய்கிறது. இயல்பு நிலையை அறிய பல பிறவிகளின் சுழற்சியின் இறுதியில் மானிடப் பிறப்பு கிடைத்துள்ளது. இயல்பான ஏழாவது அறிவின் தன் சிந்தனையின் பெருமளவில் முன்னேறுவதற்கான கருத் துருவாக்கம் இயல்பு தியானம் இது விரைவான பிரகாசமானதாயும், படைப்பாற்றலின் வெளிப்பாடாகவும், சந்தோஷமாயும், ஆனந்தமாகவும் அமையும்.

                தற்போது மிருகங்கள் எவ்விதம் நெருப்பின் பயன்பாட்டை அறியாதோ அதுபோலவே மனிதன் இயல்புணர்வைப் பற்றி சிந்தனை இருந்தும் அதன் பயன்பாட்டை அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது இயல்புணர்வு மேகமூட்டம் போல மறைந்து கொண்டு இருக்கின்றது. இயல்பு தியானம் மூலம் இயல்புணர்வை சுற்றியுள்ள கர்மவினையாகிய கருமேகங்களை அகற்றுகின்றது. மேலும் இயல்புணர்வின் விழிப்பை கூட்டுகிறது. இதனால் தங்கள் கண்ணோட்டம், எண்ணங்களின் தன்மை வாழ்க்கைப் பற்றிய அணுகுமுறை மாறுவதை உணர்வீர்கள் இதுதான் இயல்பு நிலையின் முதற்படி.

                மனித வாழ்க்கையில் மாறுபட்ட நிலைகளான அளவு கடந்த உற்சாம் அல்லது அளவுக்கு மிகவும் கீழான உற்சாகம், அளவு கடந்த தன்னம்பிக்கை (திமிர்) அல்லது அளவு கடந்த தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை சரியாக நிர்வகித்து சமநிலையை அடைய செய்வதே இயல்பு தியானத்தின் குறிக்கோளாகும். இதனால் பலவீனங்களை கடந்து செல்ல முடிகிறது. மேலும் தேவைகளுக்கும், குறிக்கோள்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை உணரமுடிகிறது. உங்களால் உங்கள் மனத்தின் தன்மையை உயர்த்த முடியும். அதன் மூலம் வாழ்வின் தரத்தையும் உயர்த்த முடியும்.

                நாம் எதுவாக இருப்பதாக நாம் நினைக்கிறோமோ அதுவாக நாம் இல்லையென்பதைப் பற்றிய சிந்தனையை அது நமக்கு தருகிறது. நம்முடைய உண்மையான இயல்புநிலை குறித்து இந்த பௌதீக உலகிற்கு எதுவும் தெரியாது. முதலில் நம் ஒவ்வொருவருடைய உள்முக நம்பிக்கைகளையும் தேர்ந்தெடுத்து நாமே என்று நாம் அறிவோம். புதிய நம்பிக்கைகள் நமக்கு முழுமையான ஒரு வாய்ப்பைக் கொடுத்தன, குறிப்பாக மிகப்பெரிய அளவிலான ஒரு முன்னேற்றத்திற்கு உதவுகின்றது. நம்முடைய உள்முக நம்பிக்கைகளில் எவற்றையெல்லாம் மாற்றிக் கொண்டு வாழ்க்கையில் நாம் முன்னேற வேண்டும்? இதற்கு இயல்பு தியானத்தில் நம்மைப் பற்றிய தெளிவு இயல்பாக கிடைக்கிறது.

                பெரும்பாலானவர்கள், தாங்கள் சிந்திப்பதற்காக ஒரு மாயை நிலையில் இருக்கிறார்கள், வேறு வகையில் சொல்லுவதானால் அவர்கள் அறிவு ரீதியாகச் சிந்தனைகளை உருவாக்குவதாகச் சிந்தனை எப்படி உருவாகிறதென்று சொல்ல முடியவில்லை. ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சிந்தனையில் செயல்முறையை கவனிக்கும் பொழுது அதன் படைப்பாளி நாம் அல்ல என்றும் வெறுமனே சிந்தனைகள் நம்முடைய இயல்புணர்வுகள் வாயிலாக உள்ளே வருவதையும், வெளியேறுவதையும் பார்க்கின்ற பார்வையாளர் களாக மட்டுமே இருக்கிறோம். இயல்புணர்வு வாயிலாக ஈர்க்கக் கூடியதாக அது இருந்து வருகிறது. அந்த தொடர்ச்சியான சிந்தனைகளை இயல்பு தியானம் மூலம் மேம்படுத்துவது சாலச் சிறந்தது.

                நாம் யாராக இருக்கிறோம் என்று சிந்தித்துப் பார்ப்பதைப் பொறுத்தே நாம் எந்த அளவுக்கு நம்மையே அறிகின்றோம் என்பது இங்குத் தெளிவுறும். அதுதான் நம்மைப் பற்றிய மையக் கருத்து அதுதான். நமக்குள் செயல்படும் ஒரு கிரியா ஊக்கியாகவோ அல்லது நம்முள்ளே செயல்படும் ஒரு கட்டுப்படுத்தியாகவோ இருக்கிறது. நாம் நம்மை உருவாக்கிக் கொள்வதற்கு மிகமிக முக்கியமான கோட்பாடாக இருக்கக்கூடியது. இந்த இயல்புணர்வுதான் நான் யார் என்று சிந்தித்து பார்க்கும் போது நம்முடைய மூளையிலுள்ள இயல்புணர்வுகள் பலவகைச் சாட்சிகள் ஒரு தொகுப்பாக இருக்கிறது. நாம் எந்த அளவுக்கு நம்மை நேசித்து கொள்கின்றோமோ அந்த அளவுக்கு நம்மைப் பற்றிய மதிப்பீட்டை உண்டாக்குகிறது. ஆகையால் நாம் எந்த அளவுக்கு நம்மை நேசிக்கின்றோமோ அந்த அளவிலிருந்து நமது இயல்புணர்வுகள் காட்சிகள் வெளியாகின்றன.

                நம்மைப் பற்றிய இயல்புணர்வின் மதிப்பீட்டை ஒட்டு மொத்தமாகத் தீர்மானிக்கக்கூடிய நம்முடைய உணர்வுப் பகுதிதான் தானியங்கி முறையில் இயல்புணர்வு படிமத்தில் கட்டுப் பாட்டில் செயல்படுவது. நாம் யாராக இருக்கிறோம் என்பதைப் பற்றி நாம் ஏற்றுக் கொண்டுள்ள வகையில் முக்கியத்துவப் படுத்தும் காட்சிகளைப் பொறுத்தே அது முழுமையாகச் செயல்படக் கூடியதாக இருக்கிறது. நம்முடைய ஒருங்கிணைந்த இயல்புணர்வுகள் நாம் யார் என்பதை வரையறை செய்கின்றன. அது இடைவிடாமல் கற்றுக் கொண்டும், மாறிக் கொண்டு இருக்கிறது. அது இன்னும் சிறப்பான நிலைமைக்கு தன்னை வளர்த்துக் கொள்வதற்கு என்றென்றைக்குமான ஒரு தேடுதலைத் தொடர்ந்து நடத்துகிறது. தியானம் மற்றும் ஆழ்ந்து சிந்தித்தல் போன்ற பயிற்சிகளின் ஊடாகத்தான் அது நிகழ்த்தப்படுகிறது. அப்படிப்பட்ட அறிவு வளர்ந்து, விரிவடைந்து, ஏற்கெனவே இருக்கும் எல்லைகளைக் கடக்கிறது. அப்போது நமது கண்களுக்கு எதிரில் முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய உலகம் தெரியும். நாம் புதிய சிந்தனைகளைப் பெறுகிறோம், புதிய பொருள்களைப் பார்க்கிறோம், புதிய உணர்ச்சிகளை அனுபவிக்கிறோம். ஒவ்வொன்றுமே புதிய அர்த்தங்களை கொண்டிருக்கிறது. நாம் பார்க்கின்ற இந்தப் பொருள்களெல்லாம் உண்மையிலேயே ஏற்கெனவே இருந்து வருபவைதான். நம்முடைய வரையறை செய்யப்பட்ட சிந்தனைகளைக் கடந்து சென்று அவற்றை நம்மால் பார்க்க முடியவில்லை. இந்த வகையில் நாம் ஒரு புதிய இயல்புணர்வு தன்மைக்கு நகர்ந்து செல்கிறோம். இன்னும் கூடுதலான ஆற்றலைப் பெற இயல்பு தியானத்தில் நம்முடைய உண்மையான இயல்புணர்வுத் தன்மையை வியக்கத்தக்க அளவில் அறியச் செய்து நம்மை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கிறது.

                இயற்கையின் இறுதி பரிணாமமாக மனித உருவில் உள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பரிணாமத்தில் இருந்து உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் அறிவின் மூலமாகத் தகர்ந்து வெளி வருகிறீர்கள். உங்களை நீங்களே உணர இயல்புதியானம் சிறந்தது. இயல்பு தியானம் என்பது நமது இயல்புணர்வையும் நம் மனதையும் நாம் மீண்டும் ஆழமாக பயிற்றுவிக்க செய்வதுதான். பின்வரும் பயிற்சியை கவனியுங்கள்.

                அமைதியான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். மூன்று முறை ஓம் என்று மனதில் ஆழ்ந்து சொல்லி உள்ளுக்குள் செல்லுங்கள். அங்கு எங்கும் நிறைந்து இருக்கும் பரம்பொருள் தத் என்ற ஒலியால் இருப்பதாக உணருங்கள். மேலும் இயற்கையான நுட்பமான முறையில் ஒலி அதிர்வால் உள்ளுணர்வு மையங்களை ஒவ்வொன்றையும் விழிப்படையச் செய்து வலுப்படுத்த செய்யுங்கள். இந்த முறையில் கற்பகமாக உள்ள தெய்வீக ஆற்றலை நுட்பமான முறையில் இயற்கை ஒலி அதிர்வால் உங்கள் இதய கமலத்தில் உந்தப்படுகிறது. இதனால் ஆற்றல் புதுப்பிக்கப்பட்டு நல்வழிப்பாதையில் செல்ல உதவுகின்றது. இதன் இயற்கையான சூழல்களால் நமது சிந்தனைகள் உடலும், மனமும் ஓய்வு கொள்ளச் செய்கிறது. இதன் உருமாறிய நிலையில் நமது மெய் இயல்புணர்வை அறியச் செய்கிறது. இயல்பு நிலையை அறிவதற்கும், தெய்வீக ஞானம் பெறுவதற்கும் எளிய வழி மெய் இயல்புணர்வை விழிப்படையச் செய்வதேயாகும்.

                தெய்வீக ஒலியலைகளால் தலையிலுள்ள வெட்ட வெளியில் உள்ள இடத்தில் ஒருங்கிணைந்த ஒலிகளால் மெய்யுணர்வோடு மெய் இயல்புணர்வு ஈர்க்கப்பட்டு ஒலியே ஒளியாகிறது. இந்த நிலையில் மனம் வலிந்து வலுப்படுத்தப்படுகிறது. இயற்கை ஒலி அதிர்வுகளும், இயல்புணர்வும் இரண்டறக் கலந்து மனத்தில் உள்ள கசடுகளை நீக்கி ஆழ்மனத்தில் உள்ள மெய்சிந்தனையை அறியச் செய்கிறது. தொடர்ந்து பயிற்சியில் இந்த மெய்சிந்தனை இயல்புணர்வை மேலும் மேலும் விழிப்படையச் செய்து பிரபஞ்ச ஆற்றலுடன் ஒரு மெய் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. அதாவது அதீதம் முதிர்ந்த நிலையில் உள்ளானந்த ஒளி ஜீவனைத் அடையும்பொழுது ஆத்ம பேரொளியாக உடலில் பரவும் இப்போது நீங்கள் நிறைவை அறிவீர்கள். மிகுந்த ஓய்வு நிலை, மிகவும் சுகமான நம்பிக்கை நிறைந்த, பாதுகாப்புள்ள மகிழ்ச்சியான உணர்வை நீங்கள் பெறுவீர்கள். அமைதியும் ஒருங்கிணையும் இன்பம் உங்களைச் சூழ்ந்திருக்கும். மெய் சிந்தனைகளும், மெய் உணர்வுகளும் உங்களிடமிருந்து வெளிப்படும். நீங்கள் நிறைவாக இருப்பதை அறிவீர்கள். மெதுவாக கண்களைத் திறந்து கொள்ளுங்கள். குருவின் அருள் நிறைந்திருப்பதை உங்களுக்குள் அறிவீர்கள்.

                இயற்கையுடன் கூடிய இணைப்பை திருப்பவும் பெற இயல்பு தியானத்தில் மெய் இயல்புணர்வை ஆழ்மனத்தில் உள்ள மெய் சிந்தனைகளை அறிவதன் மூலம் அருள் சக்தியுமாய் பொங்கிப் பெருகி சுற்றிலுள்ள அனைத்தையும் உயர்வானதாக, நல்லதாக, குணப்படுத்தும் சக்தியுடையதாக மாற்றுகிறது. தினமும் காலை, மாலை 6.30 மணிக்கு தொடங்கி 6.51 வரை 21 நிமிடங்கள் மட்டுமே இயல்பு தியானம் செய்தல் வேண்டும்.





25. இயல்பான ஏழாவது அறிவைப் பற்றிய விழிப்பு




25. இயல்பான ஏழாவது அறிவைப் பற்றிய விழிப்பு

                ``உயிரும், உடலும், மனமும் பரிணாமடைந்து இயல்பாக வெளிப்படும். இயல்பான ஏழாவது அறிவின் நிலைப் பற்றிய விழிப்பை ஏற்படுத்துவதன் மூலம் குணாதிசய மாற்றமும் அதன் இயல்பும் உணர்ந்து நிறைவாக வாழலாம்’’.

                வாழவும்-வளரவும் துடிக்கும் ஒவ்வொருவரிடத்தும் தான் மாற வேண்டும் என்ற அவா உள்ளத்து தோன்றுவது என்பது உலகத்து இயற்கை. ஆனால் இயல்பான ஏழாவது அறிவின் மாற்றம் என்பது நிலத்தில் விளைகின்ற விளைபொருள் அல்ல; இல்லையேல் காசை இரைத்தால் கிடைக்கும் கடைச்சரக்கு அல்ல. முதலில் அதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

                இயல்பான ஏழாவது அறிவின் சிந்தனையை விவரித்தால் இப்போது நாம் காணும் இந்த உலகத்தை மாற்ற அதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் புரிதலுக்கு உள்ளாக்குவதன் மூலமாகவே அது சாத்தியமாகும்.

                இன்னொரு வகையில் சொல்வதென்றால் பரந்த இந்த உலகத்தில் நாம் ஆறறிவைக் கடந்தவராக இருக்கிறோ மென்பதைத் தெரிந்து கொள்ள நமது அனுபவங்களின் அடிப்படையில் ஒரு மாறுதலான புரிதலுக்கு நம்மை உள்ளாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். நாம் ஒருவிதமான மன உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் நமது பார்வை நாம் இயல்புணர்வை உள்வாங்கிக் கொள்ளும் தகவலை நாம் எப்படி பொருள் படுத்திக் கொள்ளுகிறோம். மனிதர்களுடைய ஆழமான ஆற்றல் பிற உலகின் தூண்டுதலுக்கு உள்ளாகி, இயல்பான ஏழாவது அறிவின் புரிதலை நமக்கு தருகிறது. பிற உலகம் என்பது நம்முடைய ஆழ் மனத்தின் எதிர்வினையான பிரதிபலிப்பாகவே என்றென்றும் இருக்கிறது. ஆகவே, நம்முடைய இயல்பான ஏழாவது அறிவு என்பது நமது மனதின் துல்லியமானதும், உண்மையானதுமான இயல்புணர்வே என்பதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

                ``இயல்பான ஏழாவது அறிவினால் மனிதர்கள் தங்களுடைய இயல்புணர்வால் மனதின் உள்ளார்ந்த தன்மைகளை மாற்றிக் கொள்ளுவதன் மூலமாக, அவர்களுடைய வாழ்க்கையின் புறத்தன்மைகளை மாற்றிக் கொள்ள முடியும்’’.

                நம்மிடம் உள்ள மனித இயல்புணர்வை அனைவரும் அறிய வழிவகை செய்வதே இதன் நோக்கம். இதை விழிப்படையச் செய்வதன் மூலம் மக்களினத்தின் புலனுணர்விலும், உணர்ச்சியிலும் நுழைந்து சிந்தனைக்கும், வாழ்க்கைக்கும் ஓர் புது விளக்கம் அளிக்கிறது.

                ஒவ்வொரு உயிரினமும் ஒரு சிறப்புமிக்க இயல்புணர்வை பெற்றுள்ளன. உயிரினங்களின் இறுதி பரிணாம வளர்ச்சியான மனிதன், தன் சிந்தனைகளை உயரிய சிந்தனையாக்கி இயல்பான ஏழாவது அறிவை அறிந்து வாழ, ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். இதனால் நாம் யார் எங்கிருந்து வந்தோம், எங்கே போய்க் கொண்டு இருக்கின்றோம், எங்கே போக வேண்டும் போன்ற அனைத்திற்கும் விடையை பகுத்து உணரச் செய்து நம் இயல்புணர்வை அறிய செய்கிறது.

                உங்கள் இயல்புணர்வை நீங்கள் அறிய முடியாமல் இருக்கலாம். உங்கள் மனத்தையும் இதயத்தையும் மிகவும் நெருங்கி அலசிப் பார்ப்பீர்களானால், அது ஏன் அறிய முடியாமல் போயிற்று என்பதைக் கண்டறிவீர்கள், ஏன் அது உங்களிடம் அறிய முடியவில்லை என்பதைக் கண்டறிவதற்கான பேரார்வத்துடன் உயரிய சிந்தனை உங்களிடம் பிறக்குமானால் ஆத்ம இயல்பு தன்மை அங்கே இருப்பதை நீங்கள் அறிவீர்கள் முழுமையான உயரிய சிந்தனைகளே போரார்வத்தின் உச்சநிலை, இந்த முழுமையான உயரிய சிந்தனைகளால் இயல்புணர்வை அறியச் செய்கிறது. இதன் இயல்பு நிலையில் உலகினைச் சீர்தித்தவோ, சீரிய சமுதாயம் ஒன்றினை உருவாக்க முடியும். இந்நிலையில் இனிச் செய்தாக வேண்டியது அனைவருக்கும் இதைப் பற்றிய விழிப்பை ஏற்படுத்தவே ஆகும்.

                இதனால் ஒவ்வொருவரும் இயல்புணர்வுடன் செயல்பட முடிகிறது. முன்பு சடமாக இருந்த நாம் புலன் உணர்ச்சிகளை மட்டும் முக்கியமாகக் கொண்டு, மிருக குணங்களைப் பெற்றிருந்தோம். இயல்பான ஏழாவது அறிவைப் பற்றிய விழிப்புணர்வு நிலையை அறியும் மனிதர்களாக வளர்ந்திருக்கிறோம். நாம் மெதுவாக மனித நிலையிலிருந்து உயர்ந்து நிறைவான மனிதனாவோம். இது மனித இலக்கை அறியச் செய்கிறது. இந்த இயல்புணர்வு உங்கள் ஆழ்மனதை இயக்கி, அதன் மூலம் இயற்கை சக்திகள் இயக்கி இயல்பான ஏழாவது அறிவை அடையும் வழிவகைகளையும் உங்களுக்குள் அறிய தொடங்கும். இந்த விழிப்புணர்வின் விளைவாகத்தான் மாறுதல்களும், வெற்றிகளும் ஏற்படுகின்றன. இதன் அனுபவங்களிலிருந்து நீங்கள் பெறுகின்ற தகவல் அனைத்தும் இதன் மூலம் வடிக்கப்பட்டு உலகத்தைப் பற்றிய உங்களுடைய இயல்பு இயல்புணர்வை உணரச் செய்கிறது. இந்த விழிப்பை ஆழ்மனதுக்கு உருவாக்கி விட்டால், பிறகு உங்களாலும் அதை அலட்சியப்படுத்த முடியாது. ``இதைச் சொல்’’, ``அதைச் செய்’’ என்று ஆழ்மனம் உங்களுக்கு கட்டளையிடத் தொடங்கிவிடுமு;. மனித இலக்கை அடைவதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கும். இந்த விழிப்பால் மனிதன் தன்னை அறிந்து மற்றவர் களுக்குச் சேவை செய்து ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்க முடியும்.

                இயல்பான ஏழாவது அறிவின் இயல்பான உயரிய சிந்தனைக் கொண்டு ஒத்த அம்சம் கொண்ட செயல்முறையை ஒன்றை உருவாக்க வேண்டும். இதன் செயல்முறையைப் பின்பற்றத் தேவையான விழிப்பு இல்லாவிடில் சமுதாயத்தில் பயனேது மில்லை. எல்லா வகையான சிறந்த உணவுகளையும் சமைக்கும் அறிவை நீ பெற்றிருக்கலாம். ஆனால் சமையலறைக்குச் சென்று உண்மையில் சில உணவு வகைகளையாவது சமைக்காவிடில் பயனேதுமில்லை. எனவே இந்த செயல்முறை உனக்குள் இருக்கிறது என்ற வெறும் சிந்தனையின் அறிவு உனக்கு உதாவது; நீ அதற்காக செயல்பட வேண்டும்.

                இதன் செயல்முறைகளை நடைமுறைப்படுத்த ... என்ற இயக்கம், குழுக்களாக ஒருங்கிணைந்து இயல்பான சேவை செய்யும் ஒரு தூய்மையான அமைப்பாகும். இது ஒரு ஆரோக்கியமான தேடுதல் ஆகும். மனித இயல்புணர்வின் ஆற்றலின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிய விழிப்பு மகிழ்ச்சியும் திருப்தியும், நிறைவும் ஏற்பட வழிவகை செய்யும். இது பூரண சுதந்திரத்தை கொடுக்கும். இதனால் மனித நேயம், சகோதரத்துவம், அன்பு, தியாகம், நிறைவு ஏற்படச் செய்கிறது. இதனால் தன்னுடைய இயல்பான குணங்களைச் செம்மைப் படுத்திக் கொள்ளமுடியும். இதன் செயல்முறைகள், நடைமுறைகளைச் சமன் செய்கிறது. இதனால் நற்பண்புகளும், நல்லொழுக்கமும் மேலோங்கி இவற்றின் மதிப்பீடுகளை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது. இதன் ஆற்றலால் எல்லா செயல்களும் சரியான வழியில் அறிந்து கொள்ள ஏதுவாகிறது.

                இயற்கையின் இயல்பான ஏழாவது அறிவின் இயல்பான இயக்கம் நீண்ட கால இடைவெளிக்குப் பின் மனிதனை அடுத்த பரிணாம நிலைக்கு கொண்டு செல்லும். முயன்றால் மனிதன் விரைவாக அடுத்த நிலையை எட்ட முடியும். இம்முயற்சி இயற்கைக்கு முரணானதன்று; இயற்கையின் இயல்பான வேகத்தில் சென்று பரிணாமம் காண்பதற்குள் மனித இனமே அழிந்திடுமோ என்ற அச்சம் சூழ்ந்துள்ளது. எனவேதான் இயல்பான ஏழாவது அறிவைக் கொண்டு அளப்பரிய ஆற்றலைக் கொண்டு விரைவாகப் பரிணாமம் பெற மனிதன் முயல வேண்டும். கிடைத்தற்கரிய இந்த மனிதப்பிறப்பில் தன் இயல்புணர்வால் இயல்பான ஏழாவது அறிவு வழியிலே தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும்.

                இயல்பான ஏழாவது அறிவின், சாதனைகளைப் புரியவைத்து உயர்ந்த உண்மை நிலைக்கு அருகில் அழைத்துச் செல்கிறது. அது ஒரு கண்ணாடி போல உண்மை நிலையை பிரிதிபலிக்கிறது. அவை முடிவற்ற நிலையையும், முடிவுறும் நிலையையும் பிரதிப்பலிக்கின்றன. இது ஒரு வேளையில் உள்ள நீரில் எப்படி சூரியன் தெரிகிறதோ அவ்வாறு இயல்பான ஏழாவது அறிவில் முடிவற்ற நிலையில் உள்ள தொடர்பை அறியச் செய்கிறது. இதனால் இயல்பான ஏழாவது அறிவினால் ஏற்படும் மனோ-உடல் ரீதியான உட்தொடர்புகளையும் புரிந்து கொள்ள வழிவகை செய்கிறது. இது மனிதப் பரிணாம வளர்ச்சியில் மூளையின் உணர்வு நிலை அழைப்பிற்கும், ஆழ்ந்த நிலைக்கும் உள்ள தொடர்பைக் கொஞ்சம் கொஞ்சமாக அறியச் செய்கிறது. இந்த முறையில் உள்ளுணர்வு நிலையை விழிப்படையச் செய்து இயல்புணர்வை அறிந்து உணரச் செய்கிறது. இந்த இயல்புணர்வு மாற்றத்தால் ஆழ்மனத்தில் உள்ள சிந்தனைகளை வெளிப்படுத்து கிறது. இதன் சிந்தனைகளை வெளிப்படுத்தும் அளவிற்கேற்பவும் தடைகளைக் கடந்து தன்னைப் பற்றிய தெளிவு ஏற்படும். இதனால் புலணுணர்வு செயல்பாட்டின் வலிமை குறையும். அப்போது அது தன் சொந்த இயல்பான ஏழாவது அறிவு வழியில் செயல்பட ஆரம்பித்து இயல்பு நிலையை அறியச் செய்கிறது.

                ``தன்னுள்ளே தன்னை தேடுவதன் மூலம் தன்னுள் இயல்பான ஏழாவது அறிவை விழிப்படையச் செய்கிறது. இதனால் உண்மைகள் உணர்ந்து மனித இலக்கைப் பற்றிய துரித பயணத்தை மேலும் மேலும் அதிகரித்து பிறப்பின் நோக்கத்தை துரிதமாக அறியச் செய்கிறது’’.

இயல்பான ஏழாவது அறிவு மாற்றம் ஏற்படுத்துவதற்கான படிகள்:
                இயல்பான ஏழாவது அறிவு மாற்றத்தை நிகழ்த்த முனைகிற பொழுது எவ்வாறு அதனைச் செயலாக்கப் போகிறோம் என்பதில், இந்த நிலையில் ஒரு தெளிவான திட்டம் வேண்டும்.
1.      இயல்புணர்வால் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையை உணர்தல்.
2. இயல்புணர்வால் விழிப்படையச் செய்யும் செயல் முறைகளும் பயிற்சிகளும்.
3.   இயல்பான ஏழாவது அறிவால் மாற்றத்திற்குரிய வழிமுறை களைத் தேர்ந்தெடுத்தல்.
4.     எத்தடை வந்தாலும், அதைத் தகர்ந்தெறிந்து எப்படியும் செயலாக்கியே தீருவேன் என்ற திடமான மன உறுதியும் அதற்காக முழுமையாக ஒப்புதல் கொடுத்தலும்.
                இவ்வாறான மேற் கூறப்பட்டவைகளை தவறாது தொடர்ச்சியாக மனதில் பதில்களை அறிந்து இயல்புணர்வோடு கைக் கொண்டால்தான் இயல்பான நெறியில் பீடு நடை போட முடியும்.

                நீங்கள் முழுமையாக ஒப்புக் கொடுக்கிறபொழுதுதான் உங்கள் வெற்றி ஊர்ஜிதமாகிறது. உங்களது வெற்றிக்கு, முழுப் பொறுப்பாளி நீங்களே! உங்களை நீங்களே ஒப்புக் கொடுங்கள்!