aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

18. இயல்புணர்வு




18. இயல்புணர்வு

      மிகத் தாழ்ந்தது முதல் மிக உயர்ந்தது வரை எல்லா ஜீவராசிகள் இயல்புணர்வுடன் வாழ்ந்து மடிகின்றன. ஆனால் மனிதனிடம் மட்டும் இந்த இயல்புணர்வை உணரும் திறன் கொண்டு படைத்துள்ளார். ஆனால் அதைப் பற்றி அறியாமல் அறியாமையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இதைப் பற்றி அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய வாழ்க்கைக்கு இன்றியமையாத அறிவாகும். இந்த ஜீவன் எல்லா பிறவிகளிலும் செய்தவைகளையே செய்து கொண்டிருக்கின்றன. இவற்றிலிருந்து விடுப்பட்டு மேன்மையடைய இயல்புணர்வு மிக அவசியமாகின்றது. இந்த உணர்வு புலன்களையும் மனத்தையும் தாண்டி இருக்க வேண்டும். இவற்றைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளும் வரை சாதாரணமாக ஏற்படுகின்ற இன்பம், துன்பம், பாசம், பந்தம் எல்லாமே புலன்கள் மூலமாக வெளியே இருக்கின்ற, புறப்பொருட்களோடு தொடர்பு கொள்ளுகிறபோது, அந்தப் புறப்பொருள்களில் இருந்து வருபவைதான் என்றே எண்ணத் தோன்றும். இந்த இயல்புணர்வு அறிய அறிய மெய்யுணர்வு நிலைக்கு சென்றுவிடும்போது, புலன்வழிச் செயல்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டு அதன்மூலம் தெளிவு ஏற்படுகின்றது.
       ஆத்ம பிரார்த்தனையில் அதீதம் நிலைக்கு (உள்ளானந்த நிலைக்கு) பிறகு இந்த மெய்ஞ்ஞான இயல்புணர்வு தேகத்தில் எழுகின்றது. இது நம்முள்ளே விழிப்படைந்து வரும்போது தெளிந்த அறிவு கொண்டு இதை உணர்தல் அவசியம். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது. பிண்டத்தில் உள்ளதுதான் அண்டத்தில் உள்ளது. ஆனால் பிண்டம் விரைந்து தோன்றும், வளரும், மறையும். அண்டம் அப்படியல்ல. ஆத்மப் பிரார்த்தனையில் ஒலியைத் தருகின்ற எழுத்துகள் பிரபஞ்ச சக்தியில் இருந்து வந்தவை. இவை உருளை வடிவ தொண்டைகுழி வழியாக லம், வம், ரம், யம், ஹம் போன்ற ஒலியலைகள் சுழன்று, சுழன்று வலுப்பெற்று சக்தியை கொடுக்கிறது. இதில் ஆதிமூலமே ஒலிவடிவத்தில் ஓம், அஊம், அதீதம், தத் ஒலிக்க செய்து ஆற்றலை அளிக்கின்றது. இந்த ஒலிகளில் பழக அதனுடன் நட்பைப் பெற, அதன் அன்புக்கு பாத்திரமாக நம்மை நாம் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அங்கிருந்து வந்ததிடம் தொடர்பு கொண்டால்தான் அது நம்மை அங்கே அழைத்து செல்லும். அந்த இயல்புணர்வின் உண்மைப் பொருளையும், உணர்ந்து சிறப்பிக்கக் கூடிய ஆற்றல் பெறும். இது இயற்கை இணைப்புக்கு வழிகாட்டும்.
         இயல்புணர்வுச் சக்தி தூய்மையானது. பேரின்பமயமாய், ஞான சொரூபமாய் நிறைந்துள்ளது. இதன் சக்தியால்தான் இன்று உயிரோடு இருக்கின்றோம். இந்த சக்தியை நாம் பெரிதும் புறப்பொருளின்மீது செலுத்துவதால் நாம் வசதிகளைப் பெற்று அறியாமையில் வாழ்கிறோம். இந்த சக்தியை அகமாக கொண்டு பார்த்தால் நம்முடைய இயல்பை அறிய முடியும். நமது இயல்பை அறிவதற்காக கொடுக்கப்பட்ட இந்த சக்தியை அதற்கு பயன்படுத்தாமல் புறப்பொருளில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். இந்த சக்திக்கு தகுதியுடையவன் மனிதன். இதை வெளியே தேடிக் கொண்டு வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கின்றோம். இவற்றால் உண்மை பொருள் தோன்றவே தோன்றாது. இதைப் பற்றி விவேகம் இருந்தால் தான் இதனை அறிய முடியும்.
  ஆத்ம பிரார்த்தனை முறையில் இயல்புணர்வு சக்தியால் விரைந்து மனதை சுத்தமாக்கி அமைதியுற செய்கிறது. பிராண ஆற்றலை வலுமைப்படுத்தி உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. அதில் உள்ள உபாதைகளை நீக்குகின்றது. தொடர்ந்த பயிற்சியால் இயல்புணர்வை மேலும் மேலும் விழிக்க செய்து பிரபஞ்ச ஆற்றலுடன் ஒரு மெய் ஈர்ப்பு ஏற்படுத்துகின்றது. அதாவது அதீதம் முதிர்ந்த நிலையில் உள்ளானந்த ஒளி ஜீவனைத் தொடும் பொழுது ஆத்ம பேரொளியாக உடலில் பரவும். அப்போது காமம், கோபம், அகங்காரம், அதர்மபுத்தி முதலியவை எரிக்கப்படுகின்றன. பிறகு தேகம் முழுவதும் பரவி ஒளிதேகமாக மாறும். இந்த பிரபஞ்ச சக்தியால் விதியின் பிடியிலிருந்து விலகலாம். மரணத்தைக்கூட நீட்டவோ, குறைக்கவோ முடியும். அதாவது இந்தச் சக்தியால் விதியின் பிடியிலிருந்து விலகி இருக்கலாம். இது ஆனந்த வாழ்வைக் கொடுக்கும். மனிதனைப் பரிபூரணமாக்கும். மொத்தத்தில் பிரபஞ்ச சக்தியுடன் நேர் இணைப்பு ஏற்படுத்தும்.
        அறிவை இயல்புணர்வில் நிலை நிறுத்தி கடமைகளை சிறப்பாக செயலாற்றி மாறுபட்ட உலக சூழலில் நிலையான மனோநிலையோடிருங்கள், முடிந்த அளவு சேவையில் ஈடுபட்டு, மனதை பிரபஞ்ச உணர்வோடு நினைத்திருக்கட்டும். புத்தியை சரியாக பகுத்தறியட்டும். உங்கள் ஆத்மா இயல்புணர்வின் தொகுப்பால், மெய்ப் பொருளுடன் இணைந்திருக்கட்டும்.
   ஆத்ம பிரார்த்தனை பயிற்சியில் இயல்புணர்வுகள் ஒருமித்த நிலைபடுதலை அடைந்து உடல், மனம், உயிர் இவற்றை சமநிலையை அடையச் செய்கிறது. இதை காலை, மாலை பயிற்சியினால் இயல்புணர்வுகள் ஆற்றல் எல்லாம் ஒன்றாய் குவிந்து சீரிய ஆற்றலை கொடுக்கின்றது. இதனால் மரண பயம் நீங்குகின்றது. சிந்தனை ஒன்றாக குவிந்து மனதிலுள்ள கசடுகள் எல்லாம் கரையும். மரபு வழி குணங்கள்கூட மெல்ல மெல்ல மங்கும். தேகத்தின் தீய சக்தியையும் தூய்மையாக்கவல்லது. குணங்கள், செயல்கள், பேச்சுகள் முதலியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டு நிறைவோடும், அன்போடும், இயல்பான நிலையில் வாழ வழிவகை செய்கிறது.
  ஆத்ம பிரார்த்தனையின் குறுந்தகடு ஆடியோ விலை ரூ.99/- இது ... வெளியீடாகும். ஆத்ம பிரார்த்தனையின் (பிரபஞ்ச பிரார்த்தனையின்) குறுந்தகடு வீடியோ விலை
ரூ.399/- இது ... வெளியீடாகும். ``விளக்கம் பெறுவோம்.’’



No comments:

Post a Comment