7.இயல்பான நெறி முன்னுரை
இயல்பான நெறிக்கொண்டு, நமது எல்லா நடவடிக்கைளிலும் முழுமனதுடன் ஈடுபடும்போது, எடுத்த காரியங்கள் வெற்றிபெறுவது எளிதாகின்றன. அதன்பொருட்டு நிகழும் ஒவ்வொரு செயல்பாடுகளும் வீணாகாமல் நமக்கும், நம்மை சார்ந்துள்ள சமூகத்திற்கும் மனநிறைவை ஏற்படுத்துவதோடு, ஒரு நம்பிக்கையும் வளர்க்க ஏதுவாகின்றது. இந்த அளவிலேயே நின்றுவிடாமல் இவற்றுள் சிறுசிறு மாற்றங்கள் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்கிறது. இதன்ஒவ்வொருக்கும் இயல்பு நெறிமுறைகளை “எ.எ.எ.” வடிவமைத்துள்ளது. இதனை சீராக நடைமுறைப்படுத்த எ.எ.எ. குழுக்களாக வர்த்தகத்தில் ஈடுபட்டு, சேவை செய்வதை குறிக்கோளாக கொண்டு இயங்குகின்றது. இதன் புது அறநெறி கோட்பாடு வார்த்தக வானில் புதிய துருவ நட்சத்திரம்.
நமது வெளி உலகப் புறவாழ்க்கையின் ஊடே நம் அகவாழ்க்கையில் தெய்வீக ஆற்றலை அறிவதற்கு வழிவகை செய்வதுதான் ‘எ.எ.எ.’ இது ஒரு சுயலாபம் நோக்காத தூயசேவை எண்ணத்துடன் செயல்படும் ஓர் இயக்கம்.
தன்னை உணரச் செய்து தூய செயல்களால் வர்த்தகத்தை இணைத்து, மனிதநேயத்துடன் சேவை செய்து அதன்மூலம் நம்மிடமுள்ள தெய்வீக ஆற்றலை வெளிக்கொணரச் செய்வதுதான் ‘எ.எ.எ.’யின் நோக்கம்.
இப்போதைய கல்வி முறைகளோடு வாழ்வியல் கல்வியும், ஞானக் கல்வியும் சேர்த்துக் கற்பிக்கப்பட வேண்டும்.
இந்நூல் சிறப்பான குழமுறையில் சமுதாய கருத்துக்களையும் ஆரோக்கியமான வணி நலத்திற்கான வழிமுறைகளும் தன்னுள் கொண்டு இயல்பு நெறியில் பீடு நடை போடச் செய்கிறது.
“தன்னை தெளிவுற்று விளக்கம் பெறுவீர்”.
“நாம் தெளிவுற்று விளக்கம் பெறுவோம்”.
“எ.எ.எ.யால் அனைவரும் தெளிவுற்று விளக்கம் பெற்றுக் கொண்டே இருப்போம்”.
No comments:
Post a Comment