aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

22. இயல்பான சேவை செய்யும் கலை



22. இயல்பான சேவை செய்யும் கலை
`      `இயல்பான சேவையை ஒரு கலையாக கற்பிக்கும் போது நம் அனைவராலும் இயல்பாக உருவாக்கப்பட்ட சிக்கலான இந்த உலகில் வாழ்வது எளிதாகிறது.
       இயல்பான சேவை செய்து வாழ்வதே ஒரு சிறந்த கலையாகும். எல்லோருக்கும் முடிந்த அளவு சேவை செய்து நம்மைச் சுற்றிலும் வளத்தைப் பெருக்கிக் கொள்வதைவிடச் சிறந்த நுண்கலைவேறு எதுவுமே உலகில் இல்லை.
     இந்த வளர்ந்த சமுதாயத்தில் சேவை பற்றிய கருத்துக்கள் தெரிந்தும்கூட, சரியான நடைமுறை வழி நடத்தப்பட இயலாத காரணத்தால் இதன் புனிதத்தைத் தொடர்ந்து அறியும் வாய்ப்புக் கிட்டுவதில்லை. எனவே வணிக இயல்பான சேவையை ஒரு கலையாகக் கொண்டு நடைமுறைப்படுத்திச் செயல்படும்போது, எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது; அன்பை வெளிப்படுத்துகின்றது. பகுத்தறிவை உண்டு பண்ணுகின்றது. இகப் புத்தியினைக் குறைக்கின்றது. வேற்றுமைகளைக் களைகின்றது. ஏற்றத் தாழ்வுகளை குறைக்கின்றது. அனைவருக்கும் நிறைவு நிலையை உண்டு பண்ணுகின்றது.
     இயல்பான சேவையில் உள்ள உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறவில்லை. போதிய அளவு விளக்கப்படவில்லை. போதிய அளவு அறியப்படவில்லை. நாம் அறிந்த அன்னதானம், பிச்சைக் காரர்களுக்கு உதவுவது போன்ற சிறுசிறு நிகழ்வுகளையே சேவை என்று எண்ணுகிறோம். அது சேவையின் முழுப் பலனையும் கொடுக்கவில்லை. எனவே இதைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமானால் அதை ஒரு கலையாகவே நாம் கற்பிக்க வேண்டும். அப்போதுதான் இதன் புனிதத்தை அறிய முடியும்.
     இயல்பான சேவையை அனுபவித்து உணர்ந்து நிறைவு அடைவதுதான் உயர்ந்த சிறந்த நிலையாகும். இந்த உயர்ந்த நிலைக்கு அனைவரையும் அழைத்துச் செல்லும் முறைதான் இயல்பான சேவை செய்யும் கலையாகும்.
இயல்பான சேவை செய்யுங்கள் அதோடு நல்லவனாக இருங்கள். இதுதான் சிறந்த கலையாகும். இந்த வாக்கியம் சாதாரணமாக இருந்தாலும் இதைத் தொடர்ந்து செய்தால் அநேக இரகசியங்களை எளிதில் அறிய முடியும். இதை ஒரு கலையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தும்போது படிப்படியாக உண்மை களை அறியச் செய்து இறுதியில் உங்களை முதிர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.
    இயல்பான சேவை செய்யும் கலையில் நிறையப் பயன்கள் உள்ளன எனத் தெரிந்து வைத்துள்ளோம். இயல்பான சேவை செய்யும் கலையை முறையாக வரையறை செய்து, முறையாகச் செயல்படுத்த வேண்டும். இயல்பான சேவை செய்யும் கலை நம்முடைய வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடங்களில் ஒன்றாகும். இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நாம் எப்போதும் கற்றுக் கொண்டு வந்திருக் கின்றோம்.
     இயல்பான சேவையின் நுண்கலை என்பது அனைத்தையும் இறைவனின் படைப்பாகக் கருதுவதும், அன்பு செலுத்தும் மனோசக்தியை நாம் பெற்றிருப்பதும் இதன் சிறப்பாகும். அதனை நம் உள்ளங்களில் வளர்த்துப் பெருக்கிச் செழிப்பாக்க வேண்டும். இதனால் மட்டுமே உண்மையான விடுதலையைப் பெறமுடியும்.
     இம்முறையில் ஆக்கப்பூர்மான ஆற்றலை விழிப்படையச் செய்து விரிவடைந்து பெருகிப் பரவச் செய்கின்றது. இந்த உயிர்த் துடிப்பான உள்முக ஆற்றலைத் தூண்டிப் பேரின்ப நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்றது. இயல்பான சேவையின் தொடக்கம், அளவற்ற வளர்ச்சியின் அனுபவம் அன்பின் முதிர்ச்சிக்கு நம்மை அழைத்துச் சென்று நமது வாழ்க்கையை முழுமையுறச் செய்கின்றது.
இதனை ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து கொண்டு மன நிறைவுடன் அன்றாடம் செயல்பட வேண்டியது அவசியம். நம் கர்ம வினையைக் குறைக்க இயல்பான சேவை செய்கிறேன் என்ற உயரிய கொள்கையை மேற்கொண்டால் சீரிய வாழ்க்கை முறை உருவாகும். சேவை செய்யும் கலையால் பணியிலேயே நிறைவைக் காண முடியும்.
       “இயல்பான சேவையை அனுபவித்து தன்னை உணர்ந்து நிறைவு அடைவதுதான் உயர்ந்த சிறந்த கலையாகும்.
6. இயல்பான சேவையில் ஒன்றிய உள்ளானந்தம் தான்
   ``இயல்பான சேவையின் உயர்ந்த நிலை வெளிப்பாடு உள்ளானந்தம்’’.
   இயல்பான சேவை வாழ்க்கையுடன் இணைந்து வாழப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்தால், உள்முக யாத்திரைக்கு அது வழிக்காட்டும். வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம், அணுகுமுறை அனைத்தும் மாறும். பின் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்த நிறைவு நமக்கு ஏற்படும். இந்த நிறைவுதான் உள்ளானந்தம். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளானந்தம் அறிய முடியாமல் மறைக்கப்பட்டுள்ளது. வானத்தில் நட்சத்திரங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் நம் கண்ணுக்கு இரவில் மட்டும் தெரிகிறது; பகலில் மறைவதுபோல இருக்கிறது. ஆனால் அவை தோன்றுவதும் இல்லை; மறைவதும் இல்லை; அவ்வாறாக நமக்குக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளானந்தம் உள்ளது. அது அறியப்படாமல் இருக்கிறது. நேர், எதிர் இரண்டினாலும் உந்தப்பட்டு நாம் காரியங்களைச் செய்துகொண்டே இருக்கிறோம். நாம் இவற்றிலிருந்து விடுபட்டு இயல்பான சேவை செய்தால் உள்ளானந்தத்தை அறிய முடியும்.
    உள்ளானந்தத்தை உணருங்கள்; வெறும் பேச்சால் அல்ல. பெரியது எல்லாம் பெரியதாக உள்ள மெய்ப் பொருளின் ஒரு துகள்தான் எல்லா ஜீவராசிகளிலும் உள்ளது என்ற எண்ணம் இயல்பான சேவையில்தான் மிக எளிமையாகத் தெளிவாக அறிய முடியும். மற்ற எல்லா வழிகளும் கடினமானவைதான். இந்த இயல்பான சேவை முறையை எல்லா இதயங்களிலும் ஏற்படுத்தி அவற்றை நம் புதிய கோணத்தில் செயல்படுத்தும்போது அந்த இயல்பான சேவை புனிதத்தன்மை பெற்றுவிடும்அப்போதுதான் அவற்றின் உண்மையைப் புரிந்து உள்ளானந்தத்தை அறியமுடியும். இந்த ஆனந்தத்தை இயல்பான சேவையின் உண்மையைச் சிறு அளவாவது முதலில் அறிந்து கொள்ள வேண்டும். முதலில் அவற்றை விட்டு விடுகிறோம். பிறகு அவை தெய்வீகத் தன்மை பெற்று நம்மிடமே திரும்பி வருகின்றன. அப்போது உள்ளானந்தம் ஏற்படுகின்றது. அப்போது நம்முடைய துன்பம், துக்கம், நமது அற்ப சந்தோஷங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறையும். இந்த உள்ளானந்தம் அடையும் காலம் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப வெளிப்படும். அதுவரை நாம் இயல்பான சேவை செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த உள்ளானந்தத்தைப் பேச்சாற்றல் மூலமோ, பரந்த அறிவின் மூலமோ, வேதங்களைப் படிப்பதன் மூலமாகவோகூட எளிதில் உணர முடியாது. ஆனால் இயல்பான சேவையில் எளிதில் உணர முடியும்.
     இயல்பான சேவையால் மனம் பண்படத் தொடங்கும். இந்த இயல்பான சேவை பரம்பொருளின் சேவையாக ஆக வேண்டு மென்றால் உள்ளானந்தப் பரவசத்தோடு நீங்கள் செய்கின்ற இந்த இயல்பான சேவைப் பரம்பொருளுக்குச் செய்கின்ற சேவையாக ஆகிவிடும்.
    இந்தப் புரிந்துணர்தலுடன் நீங்கள் சாந்தத்திற்குள் பிரவேசிப்பீர்கள். ஏனெனில் இது இயல்பான சேவையை ஒட்டிய உள்ளானந்தம். இதுவே மாற்றவியலாத களிப்பு; இதுவே கட்டுப்படுத்தப்படாத அறிவு; மாசுபடுத்தப்படாத ஞானம்; தீராத அன்பு மற்றும் பரிபுரண அமைதி எய்துதல் ஆகும்.
     ஜீவராசிகளுக்கு உள்ளானந்தத்துடன் இயல்பான சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான். இயல்பான சேவையில் உள்ளானந்தம் அடைவதன் மூலம்தான் மெய்ஞ்ஞானம் அடைகின்றான். மெய்ஞ்ஞானம் அடையப் பெற்றவன் எப்போதும் மயக்க வயப்படுவதில்லை. இந்த நாகரீக வாழ்க்கையில் எல்லாவற்றையும் பகுத்தறிந்து அறிவாளிகள் மத்தியில் அறிவாளியாக, மேதைகள் மத்தியில் மேதாவியாக, துன்பமுறுபவரிடம் இரக்கமுள்ளவனாக, ஆனந்தத்தில் இருப்பவரின் சந்தோஷத்தில் மகிழ்பவனாக, மெய்ஞ்ஞானிகள் இடையில் மெய்ஞ்ஞானியாக, இளையோர் மத்தியில் இளைஞனாக, பேச்சாளர் அவையில் சிறந்த பேச்சாளராக, இல்லறத்தார் இடையே கடமையுள்ள இல்லறத்தானாக, துறவிகளிடையில் முற்றும் துறந்தவனாக இருக்கின்றான். எல்லாவற்றையும் வென்ற சிறந்த ஒருவனாகத் திகழ்கின்றான்.
          “இயல்பான சேவையில் உள்ளானந்தம் அடைவதன் மூலம் நமக்கு ஞானம் ஏற்பட்டு நிறைவாகப் பணியாற்றி இயல்பு நிலையை அடையலாம்.

1 comment: