aaa social entrepreneurship centers



No Donations Please

This aaa center is completely voluntary. Donations will not be accepted. We loves each and everyone of you with a love beyond any human comprehension.


Wednesday 24 August 2011

8. இயல்பான நெறி


8. இயல்பான நெறி
``இயல்பான நெறி என்பது இயற்கையோடு இணைந்து வாழ வழியாகும்’’.
    நமது முன்னோர்கள் சத்தியத்தையும், தர்மத்தையும் பின்பற்றி இயற்கையாக வாழ்ந்து வந்தார்கள். அதனால் அவர்கள் அகம், புறம் இரண்டுமே ஒன்றுபோல் சீராக இருந்தன. அதன் விளைவாக அவர்கள மெய்ப்பொருளோடு நேரடித் தொடர்பு கொண்டு இருந்தார்கள். அவர்தம் செயல்கள் அனைத்தும் முழுமையாக இருந்தன. மேலும் அக்காலத்தில் தொழில், கல்வி, மருத்துவம், ஆட்சிமுறை இவை அனைத்தும் புனிதமாகக் கருதப்பட்டுச் சேவை எண்ணத்தோடு செயல்பட்டன.
     காலமாற்றத்தால் இவை அனைத்தும் தற்போது வியாபார நோக்கத்தோடு நடத்தப்பட்டு வருகின்றன. இன்று உலகமே வியாபாரமயமாகக் காட்சி அளிக்கிறது. இந்த பேர் அழிவிலிருந்து உலகை மீட்டு மீண்டும் தருமம் காட்டும் வழியிலே செய்யத்தக்க மனத்திடத்தை அமைத்து, எல்லா துறைகளிலும் இயல்பான நெறியை ஏற்படுத்தி அறிவு சார்ந்ததாகப் புனிதப்படுத்த வேண்டும்.
    இயற்கையால் செய்ய முடிந்த அறவுணர்வு கோட்பாட்டை அழித்து விட்டோம். இயற்கை உருவாக்கியுள்ள இந்த சுவர்க்கத்தை பயன்படுத்த மட்டுமே செய்கிறீர்கள். மனிதகுலம் உருவாக்கியுள்ள குழப்பத்திற்கு நாமே காரணம். நாம் உணரும் இயல்புணர்வை பெற்றும் அறிய முடியாமல் அறியாமையில் முழ்கிக் கிடக்கின்றோம். இந்த குழப்பத்தில் இருந்து வெளியே வருவதற்கு இயல்பு நெறிப்பாதை வழிவகை செய்கிறது.
      இயல்பான நெறியின் உண்மைகளை அறிவதன்மூலம் நம்மிடம் உள்ள அறியாமை விலகிவிடும், புதிய உருவம் பெற்று விடும், தெய்வீகத்தன்மை பெற்றுவிடும், அவற்றை நாம் புதிய கோணத்திலிருந்து பார்க்க ஆரம்பித்து விடுவோம். அவை புனிதத் தன்மை பெற்றுவிடும். அப்போது தான் நாம் இயல்பைப் பற்றிய அனுபவம் ஏற்பட்டு இயல்பான நெறியில் ஒழுக முடியும்.
     ``நீர் நீருடன் கலந்து நீராகிறது. அதுவே நமது இயல்பான நெறி’’. ... = = இயல்பு.


No comments:

Post a Comment